Monday 14 March 2011

நான் ஓட்ட விரும்பும் விநோத மிதிவண்டி

           மாலைச் சூரியன் மேற்கில் மறைந்துகொண்டிருந்தது. இதமான தென்றல் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாலா புறமும் பச்சை பசேலென்ற மரங்களும் செடிகளும் கொடிகளும் கண்களுக்குக் குளிர்ச்சி ஊட்டிக் கொண்டிருந்தது. மரத்தில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்த வாரு என் என்னலைகள் நான் ஓட்ட விரும்பும் விநோத மிதிவண்டி எப்படியாய் இருக்க வேண்டும் என சிந்தனை பட்டாம் பூச்சியா சிறகடிக்கத் தொடங்கினது.
            நான் ஓட்ட விரும்பும் மிதிவண்டிக்குப் பல விநோதத் தன்மைகள் இருக்குமாறு திட்டமிடுவேன். அதன் பாகங்கள் யாவும் மற்ற மிதிவண்டியில் இருப்பதைக் காட்டிலும் என் விநோத மிதிவண்டியில் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவற்றில் அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகமும் என் நினைவலைகளை அறிவாற்றலையும் கொண்டு என் விநோத மிதிவண்டியை உருவாக்குவேன். 
                    நான் ஓட்ட விரும்பும் விநோத மிதிவண்டி என்னுடைய கைரேகை பட்டால் மட்டும் இயங்கும் சக்தி உள்ளதாக அமைப்பேன். மேலும், நான் எழுப்பும் ஓசையைக் கேட்டவுடன் என் அருகில் வரும் ஆற்றல் உள்ளதாகவும் அமையப்பண்ணுவேன்.
                       அதுமட்டுமின்றி, மழை மற்றும் வெயில் காலங்களில் என்னைப் பகைவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதுப் போல என்னைப் பாதுகாக்கும் ஆற்றலை அதில் புகுத்துவேன். நான் விசையைத் தட்டிய உடனே, அது ஒரு நொடிப் பொழுதில் மயில் தன் தோகையை விரிப்பது போல, ஓர் அதிசய இறக்கையை விரித்து என்னை மூடிக் கொள்ளும். இதன் வழி, நான் மழையில் நனையாமலும் வெயிலில் காயாமலும் பாதுகாக்கப்படுவேன்.
                       நான் உருவாக்கும் மிதிவண்டிக்கு உருமாறும் ஆற்றல் இருக்கும். அதனால், மிதிவண்டியை நிறுத்தி வைக்கும் பிரச்சனை ஏற்படாது. அதைச் சிறியதாக்கி எங்குச் சென்றாலும் அதைத் தூக்கிச் செல்வேன். அதனால் என் மிதிவண்டி களவுப் போகாமல் பாதுகாப்பாக இருக்கும்.
                        நான் ஓட்ட விரும்பும் மிதிவண்டி ஓர் இடத்திற்கு விரைந்து செல்லும் ஆற்றலையும் பெற்றிருக்கும். ஆதாவது மிதிக்காமலேயே, விசையைத் தட்டியவுடன் தானே பறந்து செல்லும் ஆற்றல் பெற்றிருக்கும். இது வாகன நெரிசலைத் தவிர்க்க உதவும்.
                           இத்தகைய மிதிவண்டியை உருவாக்க நான் சிறந்து படிப்பேன். அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாகி இம்மிதிவண்டியைச் சிறந்த முறையில் உருவாக்குவேன்.


Thursday 10 March 2011

கணினியின் பயன் (ஆண்டு 4)

      2020 தூர நோக்குச் சிந்தனையை நோக்கிச் செல்லும் நம் நாட்டில், பல துறைகள் மற்றும் பலரின் மத்தியிலும் கணினிப் பீடு நடைப்போட்டுக் கொண்டு அதன் பங்கையாற்றுகிறது. அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளில் அரியதாகத் திகழ்வது கணினியாகும். ஆங்கிலத்தில் இதை 'கம்ப்யூட்டர்' என்பர்.
       கணினியை 'கொன்ராட் ஜீஸ்' என்பரால் இருபதாம் நூற்றாண்டின் இடையில் (1940-1941) கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருவி எல்லாத் துறைகளிலும் பயன்படுத்துகின்றது. கல்வி, மருத்துவம், வாணிபம், தொழில் துறை, வங்கிகள், விண்வெளி ஆகிய துறைகளில் கணினி மக்களுக்குப் பெருந்துணைப் புரிகிறது.
           கல்வியில் கணினியின் பங்கு அளப்பரியது. இன்றையக் காலக் கட்டங்களில் கற்றல் கற்பித்தலில் கணினிப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், கற்றல் கற்பித்தலில் சுலபமாகிறது மற்றும் மாணவர்கள் கணினிவழி பாடங்களை மகிழ்ச்சியாகக் கற்கின்றனர். 
            முன்புக் காலங்களில் நோயாளிகளுக்கு உள்ள நோயைக் கண்டறிய சில காலங்கள் தேவைப்படும். அக்குறையை இன்று கணினி தீர்த்து வருகிறது. நோயை நொடிப் பொழுதில் கண்டுபிடிக்கும் ஆற்றல் கணினிக்கு உண்டு.
       இதைத் தவிர்த்து நாம் கணினிவழி இணையத்தைப் பயன்படுத்தி ஆங்காங்கே உள்ள நண்பர்களைத் தொடர்புக் கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, உள்நாட்டு வெளிநாட்டுச் செய்திகள் கண் எதிரே வந்து சேரும். நமக்குத் தேவைப்படும் தகவல்களை நொடிப்பொழுதில் விரிவாகவும் தெளிவாகவும் அறிய முடியும்.
          இன்று வங்கியில் நாம் சேர்க்கும் பணத்தை எந்நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் கணினியின் துணையுடன் வங்கிகளில் 24 மணி நேர சேவையைப் பயன்படுத்திப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்வெளிக்குத் துணைக்கோளங்கள் அனுப்புவதும் கணினியாலே என்று கூறிக் கொள்வதும் மிகையாகாது.
          ஆகவே, கணினியால் மனிதர்கள் நிறைய பயன் அடைகிறார்கள். கணினி இவ்வுலகத்தையே ஆட்கொண்டு ஆட்சி செய்கிறது. கிணற்றுத் தவளையாக இருந்த மனிதன் உலகத்தைப் பார்க்க கணினி உதவுகிறது. கணினியின் பயன்பாட்டை நன்கு உணர்ந்து அதன் வளர்ச்சிக்கேற்ப நம்மையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.